/*! elementor – v3.15.0 – 20-08-2023 */
.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}

ஜெப ஊழியங்கள்

திறப்பின் வாசல் உபவாச ஜெபம்

“நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும்  சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன்,..’’ எசேக்கியேல் 22:30    

என்ற கர்த்தருடைய வார்த்தையின்படி, திறப்பின் வாசல் ஜெபம் தேவனுடைய கூடாரத்தில் நடத்தப்படுகிறது. இதில், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.  அந்தநாளில் தேசத்தின் இரட்சிப்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும்  தேவசமுகத்தில் ஜெபங்கள் ஏறெடுக்கப்படுகிறது. .

The Standing in the gap prayer is conducted in the Tabernacle of God. More than 45,000 people take part in this prayer and join with us in prayer and intercession for the Nation, Revival and Salvation. 

திறப்பின் வாசல் உபவாச ஜெபம்

இந்த ஜெபத்தில் பங்கேற்பதன் மூலம் இரட்சிக்கப்பட்டவர்கள், அபிஷேகம் பெற்றவர்கள் மற்றும் அற்புதமான சுகத்தை பெற்றவர்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்காதது. பாவங்கள், வியாதிகள் மற்றும் அடிமைத்தனங்களில் அழிந்துபோகும் மக்களின் விடுதலை  மற்றும் இரட்சிப்புக்காக ஜெபிக்கவும்  திறப்பிலே   நிற்கவும் நம்மை அழைத்த இயேசு கிறிஸ்து, பரிந்து பேசுவதற்கான தாகத்தாலும்,உற்சாகத்தினாலும் கிருபையினாலும்  நம்மை நிரப்புகிறார்.   ‘இயேசு விடுவிக்கிறார்’  ஊழியத்திற்கென்று சுமார் 7000 ஜெபக்குழுக்களை எழுப்பி தந்திருக்கிறார். 

பின்மாரி மலர் புத்தகத்தில் உள்ள ஜெபக்குறிப்புகளுக்காக ஜெபித்து வருகின்றனர். இந்த திறப்பின் வாசல் உபவாச ஜெப ஊழியத்தின் மூலம் கர்த்தர் இன்னும் அவருடைய மகிமையான காரியங்களை செய்து வருகிறார்.

பரிந்துரை ஜெபங்கள்

எங்கள் பயணம்

இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஒருங்கிணைந்த பகுதி -\’திறப்பிலே  நின்று ஜெபிப்பது\’ ஆகும் .  அழிந்து வரும் மனிதகுலத்திற்காக ஜெபிக்கவும், பரிந்து பேசவும், தேசங்களுக்காக திறப்பில நின்று ஜெபிக்கவும்  திறப்பின் வாசல் உபவாச ஜெபம் தொடங்கப்பட்டது . ஆரம்ப காலத்தில், நமது இந்தி தேசத்தின் இரட்சிப்புக்காகவும், கடிதங்கள் மூலம் தங்கள் ஜெபவிண்ணப்பங்களை அனுப்பும் மக்களுக்காகவும் சகோதரர் மட்டுமே வியாழன் கிழமை ஒரு வீட்டில் உபவாசம் இருந்து ஜெபம் செய்வார்கள். அப்போது ஜெபக் குழுவைச் சேர்ந்த சிலர் அவருடன் சேர்ந்து கொண்டனர். இந்த ஜெபத்தின் மூலம் கர்த்தர் வல்லமையான செயல்களைச் செய்யத் தொடங்கியபோது, ​​அதில் பலர் சேர்க்கப்பட்டனர். பின்னர்,இடவசதி இல்லாத காரணத்தினால், இந்த பிரார்த்தனை நாலுமாவடி வாய்க்கால் அருகே அமைந்துள்ள ஒரு தென்னந்தோப்புக்கு மாற்றப்பட்டு திறப்பின் வாசல் உபவாச ஜெபம் நடத்தப்பட்டது. நாட்கள் செல்ல செல்ல அதிக ஜனங்கள் வந்தபோது தென்னந்தோப்பில் இடவசதி இல்லாமல் இருந்தது.  அதன் பின்னர் அருகில் உள்ள நிலத்தில் கட்டப்பட்ட ஓலைக் கொட்டகைக்கு மாற்றப்பட்டது.தேவனுடைய வீடு  கட்டும் திட்டத்தை கர்த்தர் கொடுத்தார்.  ‘தேவனுடைய வீடு​​​​கட்டப்பட்டு அந்த இடத்தில் ஜெபம் நடைப்பெற்றது. அதன் பின்னர் எங்கள் \’தேவனுடைய வீட்டிற்கு\’ அருகில் உள்ள நிலத்தில் கட்டப்பட்டு  இப்போது 45,000 பேர் தங்கக்கூடிய \”தேவனுடைய கூடாரம்\” என்ற பெரிய கட்டமைப்பை உருவாக்க தேவன் எங்களுக்கு உதவியுள்ளார். இப்போது தேவன் வாக்குத்தத்தம் அளித்துள்ளார், நமது ஊழியங்களின் பிரதேசங்களை விரிவுபடுத்துவதாகவும், அவரிடமிருந்து பெரிய அற்புதங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். நம்மை அழைத்த கர்த்தர் உண்மையுள்ளவர், அவர் கொடுத்த வாக்குத்தத்ததை நிறைவேற்றி வருகிறார். 

எங்களுடன் சேர்ந்து ஜெபிக்க விரும்பினால், ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை
09:00 AM – 3:00 PM
திறப்பின் வாசல் உபவாச ஜெபம் நடைபெறும். அந்த ஜெபத்தில் நீங்களும் கலந்து கொண்டு தேசத்திற்காக ஜெபித்து தேவ ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

தொலைபேசி ஊழியம்

/*! elementor – v3.15.0 – 20-08-2023 */
.elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=\”.svg\”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block}

1985 ஆம் ஆண்டில் ‘இயேசு விடுவிக்கிறார்’ தொலைபேசி ஊழியம் தொடங்கப்பட்டது, மேலும் இது மில்லியன் கணக்கான மக்களின் கண்ணீரைத் துடைத்து இன்னும் ஆறுதல் அளிக்கும் ஊழியமாக செயல்படுகிறது. எமது ஊழியத்தின் ஆரம்ப நாட்களில் நாலுமாவடியில் உள்ள தபால் நிலையத்திற்கு  ஜெபத்திற்காக தொலைபேசி அழைப்புகள் வரும். பிறகு, எங்கள் அண்ணன் தபால் நிலையத்திற்கு  சென்று அங்கிருந்து போனில் ஜெபம் செய்வார்கள் . அதன் பிறகு, எங்கள் பகுதில் உள்ள  ‘குரும்பூர்’  என்ற இடத்திலிருந்து தொலைபேசி வசதி கிடைத்தது. ஒவ்வொரு நாளும் பல ஜெப அழைப்புகளின் விளைவாக, 2000 ஆம் ஆண்டில் தொலைபேசி மூலம் ஜெபிக்கவும் ஆலோசனை வழங்கவும் தேவனின்  5 முழுநேர ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.

அர்ப்பணிக்கப்பட்ட ஊழியம்

2008 ம் ஆண்டில்  நமது ஊழியத்தின் ஒரு பகுதியாக தொலைபேசி ஊழியம் ஆரம்பிக்கப்பட்டது.ஒரு ஆண்டிற்கு 4000 க்கும் மேலானோர் ஜெபத்திற்காக தொடர்பு கொள்கின்றனர்.  

24 மணி நேர ஜெப உதவி

2009 ம் ஆண்டில் இருந்து இந்த ஊழியம் 24 மணி நேரமும் செயல்படுகிறது. தற்போது 21 முழுநேர ஊழியர்களும், 11 தன்னார்வ ஊழியர்களும் இணைந்து கர்த்தருடைய ஊழியத்தை நிறைவேற்றுகின்றனர்.

கண்ணீர் ஜெபம்

கடந்த 2017 ம் ஆண்டில் இருந்து இன்று வரை, 2.5 மில்லியனுக்கும் அதிகமான ஜெப அழைப்புகளுக்கு ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டுள்ளது. பாரமுள்ள இந்த கண்ணீரின் ஜெபத்தைக் கேட்டு தேவன் ஜனங்களின் கண்ணீரைத் துடைத்து அற்புதங்களை செய்து வருகிறார்.

ஆலோசனை ஜெப ஊழியம்

ஆலோசனை மையம்

ஆலோசனை ஜெப மையம் தேவனின் வீடு மற்றும் தேவனுடைய கூடாரம் இரண்டிலும் செயலில் உள்ளது. ஆரம்ப நாட்களில், ஜெபத்திற்கும் ஆலோசனைக்கும் வரும் அனைத்து மக்களுக்கும் கர்த்தருடைய ஊழியர்கள் ஜெபம் செய்து ஆலோசனை வழங்குவார்கள். முதலாவதாக, ஆலோசனை ஜெப மையம் 2002 ஆம் ஆண்டில் தேவனுடைய வீட்டில் தொடங்கப்பட்டது, பின்னர் 2015 ஆம் ஆண்டில் தேவனுடைய கூடாரத்தில் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் தேவனால் அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்கள் விடுதலை மற்றும் ஆசீர்வாதங்களுக்காக ஆலோசனைகளை அளித்து பாரத்துடன் ஜெபம் செய் து வருகின்றனர். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஆலோசனை ஜெப மையத்தை நாடி வரும் அனைத்து மக்களும் ஜெபித்து விட்டு சமாதானத்துடன் செல்கின்றனர். .

ஜெபம் மற்றும் ஆலோசனை!

அனைவருக்கும் ஜெபம் செய்யப்படுகிறது! குறிப்பாக, ஏராளமான கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் இந்த ஆலோசனை ஜெப மையத்திற்கு வருகை தருகின்றனர். தெளிவான நற்செய்தி அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு ஒரு புதிய ஏற்பாடு கொடுக்கப்பட்டு கடைசியில் அவர்கள் இயேசு கிறிஸ்துவுக்குள் உறுதியாக நிற்க அறிவுரை வழங்கப்படுகிறது.

ஆலோசனை

எங்கள் ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்

எளியவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கவும், இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக்  காயங்களைக் கட்டவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும், தொலைபேசி ஊழியம் மற்றும்  ஆலோசனை ஜெப மையத்தின்  ஊழியர்களை தேவன் பயன்படுத்தி வருகிறார்.

Scroll to Top