/*! elementor – v3.15.0 – 20-08-2023 */
.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}

About

சகோ. மோகன் சி லாசரஸ் மற்றும் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள்

சகோ. மோகன் சி லாசரஸ்

சகோ. மோகன் சி.லாசரஸ் தனது குடும்பத்தின் உறுதியான மத பாரம்பரியத்தின் படி வளர்க்கப்பட்டவர். இயேசுவைப் பற்றி பேசுபவர்களுடன் அவர் சண்டையிடும் பழக்கத்தை  வைத்திருந்தார். தன் மனதில் இயேசுவை புத்தர் மற்றும் காந்தியுடன் மட்டுமே ஒப்பிட்டு பார்த்தார். இயேசுவின் தெய்வீக அன்பை  அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. மேலும், அவர் உள்வாங்கிய போதனை இயேசு மற்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் மீது வெறுப்பை மட்டுமே வளர்த்தது!

அவரது இளமைப் பருவத்தில், புரிந்துகொள்ள முடியாத இதய நோயால் அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். பலதரப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் செய்து பார்த்தும் சரியாக்க முடியவில்லைஅதற்கு பதிலாக, அவரது இதயம் மிகவும் வீங்கத் தொடங்கியது. இதனால், உடல் செயலிழந்து படுக்கையில் கிடந்தார். அவருடைய நாட்களை எண்ணும் அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது.

அவருடைய பெற்றோர் இயேசு கிறிஸ்துவைத் தவிர ஒவ்வொரு தெய்வங்களையும் வணங்கி வந்தனர், ஏனெனில் இயேசு கிறிஸ்து என்ற  பெயரே அவர்களுக்கு வெறுப்பாக இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது.

இந்த ஆபத்தான சூழ்நிலையில்,  ஒரு நண்பர் சகோதரனுக்காக ஜெபித்தபோது இயேசு கிறிஸ்துவின் சுகமளிக்கும் வல்லமை  அவர் மீது இறங்கியது, ஜெபம் முடிந்ததும், அவர் மெதுவாக படுக்கையில்எழுந்து அமர்ந்தார்.

இயேசு கிறிஸ்துவை அவருடைய சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டார். மோகன் சி. லாசரஸ் அவர்கள் தேவனின் அன்பை வெளிப்படுத்தும் செய்திகளின் மூலம் மில்லியன் கணக்கான மக்களை ஊக்கப்படுத்தியுள்ளார்கள். திரளான மக்கள் மத்தியில் ஊழியம் செய்ய கர்த்தர் அவர்களைப் பயன்படுத்தினார். மற்றும் இருதயம் நொறுக்குண்டவர்களும், துயரப்பட்டவர்களும் ஆறுதல் அடைந்தும், ஆசிர்வதிக்கப்பட்டும், தங்கள் வியாதிலிருந்தும், போராட்டத்திலிருந்தும், பிரச்சனைகளிலிருந்தும், பாவங்களிலிருந்து,சாபங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டும் வருகிறார்கள். ஜெபம் மீதான அவரது ஆர்வம் தேசங்களை அசைக்கிறது. மற்றும் ஆத்துமாக்கள் மீது அவர் கொண்டுள்ள வைராக்கியம் ஒப்பிடமுடியாதது. கர்த்தருடைய திட்டத்தின்படி இந்த பன்முக ஊழியம் தோன்றியது.

ஜெபியுங்கள்!

  • அனைத்து நகரங்களிலும் உலக எழுப்புதல் ஜெப மையங்களை நிறுவ எடுக்கப்படுகின்ற முயற்சிகளுக்காக.
  • அனைத்து உலக எழுப்புதல் ஜெப மையங்களிலும் தினமும் கூடி தேசத்திற்காக ஜெபம் செய்யும் ஜெப வீரர்களுக்காக.
  • 12 மணி நேர ஜெபங்கள் , உபவாச ஜெபங்கள், முழு இரவு ஜெபங்கள், திறப்பின் வாசல் ஜெபங்கள் நடத்தி ஜனங்களை ஜெபத்தில் ஊக்கப்படுத்துவதற்காக

அறிவியுங்கள் !

  • சிறுவர்கள், இளம் வாலிபர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்துவதற்காக முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
  • பத்திரிக்கைகள், தொலைக்காட்சி, கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல் மூலம் நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.
  • விடுதலை முகாம்கள் மூலம் நோய்கள் மற்றும் பாவத்தின் அடிமைத்தனத்தில் இருக்கும் மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு , விடுதலைக்காக ஜெபம் ஏறெடுக்கப்படுகிறது.

/*! elementor – v3.15.0 – 20-08-2023 */
.elementor-column .elementor-spacer-inner{height:var(–spacer-size)}.e-con{–container-widget-width:100%}.e-con-inner>.elementor-widget-spacer,.e-con>.elementor-widget-spacer{width:var(–container-widget-width,var(–spacer-size));–align-self:var(–container-widget-align-self,initial);–flex-shrink:0}.e-con-inner>.elementor-widget-spacer>.elementor-widget-container,.e-con-inner>.elementor-widget-spacer>.elementor-widget-container>.elementor-spacer,.e-con>.elementor-widget-spacer>.elementor-widget-container,.e-con>.elementor-widget-spacer>.elementor-widget-container>.elementor-spacer{height:100%}.e-con-inner>.elementor-widget-spacer>.elementor-widget-container>.elementor-spacer>.elementor-spacer-inner,.e-con>.elementor-widget-spacer>.elementor-widget-container>.elementor-spacer>.elementor-spacer-inner{height:var(–container-widget-height,var(–spacer-size))}

தேசத்தை ஜெபங்களால் மூடுங்கள்!

தேவனுடைய வார்த்தையால் நிரப்புங்கள்!

Scroll to Top