/*! elementor – v3.15.0 – 20-08-2023 */
.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}

கடித ஊழியங்கள்

கடித ஊழியங்கள் பற்றி

கடித ஊழியங்கள் இரண்டு விதமாக செயல்பட்டு வருகிறது.

கடிதம்

மின்னஞ்சல்

1978ம் வருடத்தில்

‘‘…சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயம்கட்டுத்தலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையும்,  கட்டுண்டவர்களுக்குக்  கட்டவித்தலையும் கூறவும், …துயரப்பட்ட  அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், சியோனிலே துயரப்பட்டவர்களை சீர்ப்படுத்தவும், …அவர் என்னை அனுப்பினார்..’’

ஏசாயா 61 : 1,2,3 

என்ற கர்த்தருடைய வார்த்தையின்படி ஜெபிப்பதற்கு வரும் கடிதங்களை எங்கள் சகோதரர் மோகன் சி.லாசரஸ் அவர்கள் பல தேவ ஊழியர்களுடன் சேர்ந்து தேவ சமூகத்தில் கடிதங்களை வைத்து, கண்ணீருடன், பாரத்தோடு உபவாசமிருந்து, தலைமை அலுவலகத்திற்கு வரும் அந்தக் கடிதங்களுக்காக  ஜெபித்து, அதை  வாசித்து, துயரப்பட்ட மக்களுக்கும்,வாழ்க்கையில் உடைந்துபோய் கண்ணீருடன் இருக்கிற பிள்ளைகளுக்கும் ஆறுதலாகவும், ஆலோசனைகள் வழங்கி தேவன் கொடுத்த பதில்களை சகோதரர் அவர்கள் எழுதி அனுப்புவது வழக்கம். 

/*! elementor – v3.15.0 – 20-08-2023 */
.elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=\”.svg\”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block}

கடித ஊழியம்

ஜெபத்திற்காக எங்களோடு தொடர்பு கொள்ளும் மக்களுக்கு அவர்களின் சொந்த மொழிகளில் பதில் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன . இயேசு கிறிஸ்துவை அறியாத மக்கள் எங்களோடு கடிதங்கள் மூலம் தொடர்பு கொள்ளும்போது, அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பையும், அவர் செய்த அற்புதங்களையும், அதிசயங்களையும் கடிதங்கள் வாயிலாக சுவிசேஷம் அறிவித்து வருகிறோம். கடிதம் அனுப்புகிற மக்கள் மத்தியில் அநேக ஜீவனுள்ள சாட்சிகளை கர்த்தர் எழுப்பி தந்திருக்கிறார்.  

கையால் எழுதப்பட்ட கடிதங்கள்

பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலுடன் 1978ம் வருடத்தில் நூற்றுக்கணக்கான ஆத்துமாக்களுக்கு ஆறுதலாக பதில் அனுப்ப துவங்கிய இந்த கடித ஊழியம், தற்போது பல லட்ச கணக்கான ஆத்துமாக்களுக்கு தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் பதில் கடிதங்கள் அனுப்புவதற்கு கர்த்தர் கிருபை செய்து வருகிறார்.   சுமார் 33 நாடுகளில் இருந்து பிரார்த்தனைக்காக எங்களோடு தொடர்பு கொள்ளும் மக்களுக்கு அவர்களின் சொந்த மொழிகளில் பதில் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.


ஜெப வீரர்கள்

நமது சகோதரர் மோகன் சி. லாசரஸ், பல தேவ ஊழியர்களுடன் சேர்ந்து, ஜெபித்து, கண்ணீரோடும், பாரத்தோடும் உபவாசம் இருந்து, எங்கள் தலைமை அலுவலகத்துக்கு வரும் அந்தக் கடிதங்களுக்கு தேவன் கொடுத்த  வார்த்தைகளை மேற்கோள் காட்டி அவர்களுக்குப் பதில் அனுப்புவார். மேலும், இயேசுவை அறியாதவர்களுக்கு புதிய ஏற்பாடு, DVD மற்றும் நற்செய்தி புத்தகங்கள் அனுப்பப்படுகின்றன. இதன் மூலம் மரணப் படுக்கையில் இருப்பவர்களுக்கும், கண்ணீரின் பாதையில் செல்பவர்களுக்கும் கர்த்தர் விடுதலைக் கொடுத்து வருகிறார்.

மின்னஞ்சல் மற்றும் WhatsApp

இது மட்டுமின்றி, இந்த நாட்களில் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் தகவல் தொடர்பு மற்றும் வளர்ச்சியின் விளைவாக, உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான மக்கள் எங்களுக்கு WhatsApp மற்றும் மின்னஞ்சல் மூலம் ஜெபக்குறிப்புகளை அனுப்புகிறார்கள். அவர்களுக்காக ஜெபித்து, தேவன் அளிக்கும் வாக்குத்தத்தங்களை அவர்களுக்கு பதில் அனுப்பி வருகிறோம். இந்த ஊழியத்தின் மூலம், இயற்கைக்கு அப்பாற்பட்ட அதிசயங்களை அனுபவித்த ஆயிரக்கணக்கான மக்கள், அவர்கள் பெற்ற ஆறுதல், விடுதலை மற்றும் ஆசீர்வாதங்களுக்காக தேவனை மகிமைப் படுத்துகிறார்கள்.

வாராந்திர அறிக்கை நிலை

/*! elementor – v3.15.0 – 20-08-2023 */
.elementor-counter .elementor-counter-number-wrapper{display:flex;font-size:69px;font-weight:600;line-height:1}.elementor-counter .elementor-counter-number-prefix,.elementor-counter .elementor-counter-number-suffix{flex-grow:1;white-space:pre-wrap}.elementor-counter .elementor-counter-number-prefix{text-align:right}.elementor-counter .elementor-counter-number-suffix{text-align:left}.elementor-counter .elementor-counter-title{text-align:center;font-size:19px;font-weight:400;line-height:2.5}
0
+
கடிதங்கள் பெறப்பட்டன
0
+
மின்னஞ்சல்
0
+
சாட்சிகள்
0
+
பின்தொடர் கடிதங்கள்

Testimony


Scroll to Top